தி.மு.க எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் அவையை ஒழுங்காக நடைபெற எதிர்கட்சிகள் விடவில்லை. பிரச்சனைகளை குறித்து அவையில் பேசாமல் தேவையற்ற அமளியில் ஈடுபட்டனர் எதிர்கட்சியினர். சபாநாயகர் இருக்கை அருகே பதாகைகளுடன் சென்று முற்றுகையிட்டனர். இதனால், தி.மு.க எம்.பிக்களான கனிமொழி என்.வி.என். சோமு, கிரிராஜன், என்.ஆர். இளங்கோ, அப்துல்லா, சண்முகம், திருணமூல் எம்.பி.க்களான டோலோசென் உள்ளிட்ட 11 பேர் மீது நாடாளுமன்ற சட்டம் 256வது பிரிவின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த எம்.பிக்கள் மழைக்கால கூட்டம் முடியும் வரை பங்கேற்க முடியாது. ஏற்கனவே 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.