பிரிட்டனின் அடுத்த பிரதமர் பாரத வம்சாவளியினர்?

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமர் பதவியை ஏற்க முடியும்.

கடந்த சில வாரங்களாக நடந்து வரும் இத்தேர்தலில், முதலில் எட்டு பேர் போட்டியிட்டனர். ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த ஓட்டு பெறுவோர் வெளியேற்றப்பட்டு வந்தனர். அதன்படி, நான்காம் கட்ட தேர்தலில் நேற்று முன்தினம் நடந்தது இதன் இறுதியில் பாரத வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், 118 ஓட்டுகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும் இருந்தார். வர்த்தக அமைச்சர் பென்னி முர்டான்ட் 92 ஓட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தார். வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், 86 ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் நேற்று நடந்த ஐந்தாம் மற்றும் கடைசி கட்டத் தேர்தலில் 137 ஓட்டுகளுடன் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

லிஸ்டிரஸ், 113 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். பென்னி மிர்டான்ட், 105 ஓட்டுகளுடன் வெளியேறினார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் மோத உள்ளனர். கட்சியின், 1.60 லட்சம் தொண்டர்கள் ஓட்டளித்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் செப் 5ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.