கார்கில் போர் நினைவு தின பேரணி

1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் வெற்றியின் 23ம் ஆண்டை நினைவுகூரும் விதமாகவும், ‘சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவை’க் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும், இந்திய ராணுவம், டெல்லியிருந்து திராஸ் (லடாக்) எல்லையிலுள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம்வரை மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 18 ஜூலை 2022 அன்று, டெல்லியிலுள்ள போர் நினைவகத்திலிருந்து 30 பேர் கொண்ட சைக்கிள் பேரணியை, ராணுவத் துணைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மோட்டார் சைக்கிள் பேரணி, 26 ஜூலை 2022 அன்று திராஸிலுள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் நிறைவடையும். இரு குழுவினராக செல்லும் இவர்கள், ஜோஹிலா பாஸ் மற்றும் ரோஹ்தாங் பாஸ் பகுதிகள் வழியாக கடினமான பாதைகள் வழியாக, உயரமான மலைப்பாதைகளில் முறையே, 1400 கிலோ மீட்டர் மற்றும் 1700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யவுள்ளனர்.