ஆற்றில் கிடைத்த சிவலிங்கம்

உத்தரப் பிரதேசம் காக்ரா ஆற்றில் ஒளிரும் பொருளை அங்குள்ள மக்கள் கண்டனர். அந்த பொருளை வெளியே எடுத்தபோது, அது பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் என்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், சிவலிங்கம் எங்கிருந்து வந்தது, எப்படி ஆற்றில் வந்தது என விசாரித்து வருகின்றனர். அந்த சிவலிங்கத்தை காவல் நிலைய பாதுகாப்பு அறையில் பத்திரமாக உரிய மரியாதையுடன் வைத்தனர். இது குறித்து சிறப்பு ஏஜென்சிகளால் விசாரிக்கப்படும் என காவல்துறை அதிகார் எஸ்.பி அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.