அடாவடி தி.மு.க எம்.பி

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் ஹிந்து மத சம்பிரதாயப்படி பூமி பூஜை நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு மதம் சார்ந்த பூமி பூஜை நிகழ்ச்சிகளை அரசு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க முடியாது என தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார். பூமியை தெய்வமாக நினைத்து வழிபடுவது ஹிந்து மரபு. அங்கு மேற்கொள்ளப்படும் பணியின்போது பூமித்தாயை காயப்படுத்தும் பாவத்தில் இருந்தும் அங்குள்ள சின்னஞ்சிறு உயிர்களை அறியாமல் கொல்லும் பாவத்தில் இருந்தும் மன்னிக்க கோரி செய்யப்படும் பூஜை இது. ஆனால், இந்த பழக்கம் இல்லாத கிறிஸ்தவ பாதிரிகள், முஸ்லிம் குருமார்கள், தி.கவினர் இதில் எப்படி கலந்துகொள்வார்கள்? என்பதுகூட தெரியாத எம்.பி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்த அதிகாரிகளை கண்டித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக கண்டிக்கப்பட்டது. தி.மு.க எம்.பி. செந்தில்குமாரின் இந்த அநாகரீக நடவடிக்கையை ஹிந்து அமைப்பினரும் பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “அரசு விழாவில் ஹிந்து சமயப்படி பூஜை செய்யக்கூடாது என்று பூஜையை கலைத்த தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத தற்குறி செந்திலின் ஹிந்து விரோத செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. ஹிந்து கோயில்கள் மட்டும் அரசிடம் உள்ளவரை அரசு விழாக்களில் ஹிந்து முறைப்படியான பூஜைதான் நடத்த வேண்டும். இது திராவிட மாடல் அரசு என்று பேசும் செந்தில், சேகர்பாபு அலுவலகத்தில் நுழைந்து உங்கள் நிர்வாகத்தின் கீழ் எங்கே சர்ச் எங்கே, மசூதி எங்கே மணியம்மை டிரஸ்ட் எல்லாத்தையும் அரசுடைமையாக்கு என்று கூச்சலிட தைரியம் உண்டா? மானம்கெட்ட பச்சை ஹிந்து விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என கூறியுள்ளார்.