தொடரும் கொலை மிரட்டல்கள்

நூபுர் ஷர்மா சொன்ன கருத்துக்களுக்காக பல ஹிந்துக்களை இடைவிடாமல் வேட்டையாடி வருகின்றனர் முஸ்லிம் அடிப்படைவாதிகள். கன்னையா லால் மற்றும் உமேஷ் கோல்ஹே என்ற இரண்டு அப்பாவி ஹிந்துக்களை கொடூரமாக வெட்டிக்கொன்ற பிறகும் அவர்களின் ரத்த வெறி அடங்குவதாக தெரியவில்லை. நூபுர் ஷர்மாவை ஆதரித்து கருத்து பதிவிட்டவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நுபுர் ஷர்மாவின் படம் பதிவேற்றப்பட்டதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கியது. ஆரம்பத்தில், இந்த அச்சுறுத்தல்களை அவர் புறக்கணித்தார், ஆனால் ஏழு பேர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததால், அவர் காவல்நிலையத்தில் இதனை தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், முகமது அயன் அடாஷ்பாஜிவாலா, ரஷித் புரா என்ற இரண்டு ஆண்களையும் அலியா முகமது என்ற பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மற்ற நான்கு குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.