முதல்வரின் மகள் வாக்குமூலம்

காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது. காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1989ம் ஆண்டு அவர் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது முப்தி முகமதுவின் மகள் ரூபியாவை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அவரை மீட்பதற்காக 5 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். இதன் பிறகு பாதுகாப்பு கருதி தமிழகத்தில் ரூபியா வசித்து வருகிறார். இந்த கடத்தல் வழக்கு ஜம்மு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ரூபியா நேரில் பங்கேற்றார். அப்போது ஜே.கே.எல்.எப். பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் பயங்கரவாதியுமான யாசின் மாலிக் உட்பட 4 பேர் தன்னை கடத்தியதாக நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்தார். யாசின் மாலிக் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்றார். அவரை காஷ்மீருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.