தேசிய சின்னம் திறப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட நான்கு சிங்கங்களைக் கொண்ட தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றத்தின் பணிகளை பார்வையிட்டதோடு அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.