ஆர்.எஸ்.எஸ் கூட்டம்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாநில பொறுப்பில் உள்ள பிரச்சாரகர்களுக்கான தேசிய கூட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு (7,8,9 ஆகிய தேதிகளில்) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனுவில் நடைபெறஉள்ளது. இக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தேசிய பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, கிருஷ்ண கோபால், மன்மோகன் வைத்யா, சி.ஆர் முகுந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள். இதில், அமைப்பு ரீதியிலான பணிகள், சங்க சிக்ஷா, அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டங்கள், விரிவாக்கப் பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன’ என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகிலபாரத பிரச்சார பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.