காலைத்தொட்டு வணங்கிய மோடி

ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். “டிஜிட்டல் இந்தியா பாஷினி”, “டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்” உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில் பீமாவரத்தில் தனது உரைக்குப் பிறகு, ஆந்திராவை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை சந்தித்த பிரதமர், அவரது காலைத்தொட்டு வணங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.