பொதுமக்கள் கருத்து கேட்பு

சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் சர்வதேச கிளை வளாகங்கள் மற்றும் கடலோர கல்வி மையங்களின் செயல்பாட்டிற்கான விரிவான மற்றும் சீரான ஒழுங்குமுறை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான வரைவு விதிமுறைகளை தயாரித்துள்ளது. உலகளவில் பின்பற்றப்படும் தலைசிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்து கோரப்பட்டுள்ளது. வரைவு விதிமுறைகளுடன் கூடிய ஆலோசனைத் தாள், IFSCA அமைப்பின் இணையதளமான https://ifsca.gov.in/PublicConsultation ல் கிடைக்கிறது, ஜூலை 21, 2022 அன்று அல்லது அதற்கு முன்பு வரைவு விதிமுறைகள் குறித்த பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள், பரிந்துரைகளை வரவேற்கப்படுகிறது.