உ.பியில் மதவெறியர்கள் கைது

ராஜஸ்தானின் உதய்பூரில் இரண்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் கன்னையா லால் என்பவரை கொடூரமாக தலையை வெட்டிக் கொன்றனர். ஆயுதம் ஏந்தாத, எதிர்த்துத் தாக்காத ஒரு அப்பாவி நபர், ஏமாந்திருந்தபோது பின்னால் இருந்து தாக்கிக் கொன்ற இந்த கொடூர சம்பவத்தை, பல முஸ்லிம் அமைப்புகளும் கடுமையாக கண்டித்துள்ளன. எனினும் இதனை ஏதோ பெரிய வீரதீர சாகசம் போல சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் உத்தரப் பிரதேசத்தில் இந்த கொடூரத்தை பட்டாசு வெடித்தும் சமூக வலைத்தலத்திலும் கொண்டாடிய சிலரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆசிப் கான், மஞ்சூர் மற்றும் அவரது மகன் ஷாஜாத் ஆகியோர் இதில் சிலர்.