ஹரியானாவில் மற்றொரு கொலை முயற்சி

ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் விக்கி பரத்வாஜ் என்ற மற்றொரு ஹிந்து நபர் சில முஸ்லிம் நபர்களால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். அவர்கள் விக்கியை கொடூரமாக கத்தியால் குத்தி அவரது நெஞ்சை கிழித்துள்ளனர். விக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் கூற்றுப்படி,  தாக்குதல் நடத்தியவர்கள் அஞ்சும் மற்றும் பிலால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மொத்தம் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த ஜூன் 28 அன்று விக்கி தனது மொபைல் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக டெல்லி சென்று திரும்புகையில், நள்ளிரவு 12 மணியளவில் அவரது காரை தடுத்து நிறுத்தி அவர்கள் தாக்கியுள்ளனர். அவரது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததால் குற்றவாளிகள் தப்பிவிட்டனர். எனினும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு தனிப்பட்ட சண்டையே காரணம், மதவாதச் செயல் அல்ல என காவல்துறை கூறுகிறது. இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.