பா.ஜ.க தேசிய செயற்குழு

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம், இன்று மற்றும் நாளை நடக்கவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, அதற்கான கட்சிப் பணிகள், மாநிலங்களில் உள்ள மற்ற கட்சிகளின் செயல்பாடுகள், தென் பாரதத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்துவது குறித்து, இதில் விரிவாக ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சி தலைமையின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் ஹைதராபாத் சென்றுள்ளார்.