டாஸ்மாக் மீது மட்டும்தான் அக்கறையா?

தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அந்நிய மரங்கள் பரவியுள்ளன. போர்க்கால அடிப்படையில் அவற்றை அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கப்படும். அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ராசாயன முறையில் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற ரூ.5.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை, சத்தியமங்கலம், தருமபுரி, உல்ளிட்ட பகுதிகளில் இவை அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்நிய மரங்களை முழுமையாக அகற்றுவது, எவ்வளவு பரப்பில் அந்நிய மரங்கள் அகற்றப்பட உள்ளன என்பது குறித்த திட்ட அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டாஸ்மாக் நிர்வாகம் போல வருமானம் தருவதாக இருந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 25க்கு தள்ளிவைத்தனர்.