திராவிட மாடல் சமூக நீதி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் அங்கு அமர நாற்காலிகள் இருந்தும் தரையில் அமரவைக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனை கண்டித்துள்ளதுடன், “சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்ட கால கோரிக்கையைத் தமிழக பா.ஜ.க முன்னெடுத்துச் செல்லும்” என தெரிவித்துள்ளார்.