வேலைவாய்ப்பை தரும் அக்னிபத்

அக்னிபத் திட்டம் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் என்று மத்திய விமானப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெனரல் வி கே சிங்  தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளரிடம் பேசிய அவர், பாதுகாப்புத்துறையின் நீண்டகால தேவைகளை அறிந்து அஜய்விக்ரம் சிங் குழு, கார்கில் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாற்றம் தேவைப்பட்டால் அதை ஏற்க அரசு தயாராக உள்ளதாக கூறினார். முன்னதாக, உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் அமைச்சர் ஜெனரல் வி.கே சிங் கலந்து கொண்டார்.