படகோட்டிய அசாம் அமைச்சர்

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்திலுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் கச்சார் மாவட்டத்திலுள்ள சில்சார் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட அமைச்சர் பரிமால் சுக்லபைத்யா சென்றிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள நோயாளி ஒருவர், டயாலிசிஸ் செய்ய மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்தார். இதையடுத்து அவரை படகில் அமர வைத்து படகோட்டியாக செயல்பட்டு படகை செலுத்தினார் பரிபால் சுக்லபைத்யா. ஆம்புலன்ஸ் வாகனம் வரை படகில் அவரை அழைத்துச்சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. மக்கள் அமைச்சரை வாழ்த்தினர்.