அக்னி வீரர்களுக்கு அரசு பணி

பிவானியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ‘அக்னி பாதை திட்டத்தின் கீழ் முப்படையில் சேரும் அக்னி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது உறுதி செய்யப்படும். மாநிலத்தின் ‘சி’ பிரிவு பணி மற்றும் காவல் துறைகளில் அக்னி வீரர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களின் வளமான எதிர்காலம் பாதிக்கப்படாது’ என்று தெரிவித்தார்.