நவீன் பெற்றோரை சந்தித்த மோடி

கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் ரஷ்ய போரின்போது உக்ரைனின் கார்கிவ் நகரில் வெடிகுண்டுத் தாக்குதலில் பலியான 21 வயது மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் பெற்றோரை சந்தித்து பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சந்திப்பின் போது, ​​உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்க ஏற்பாடு செய்யுமாறு நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்தியர்கள் தங்கள் கனவைத் தொடர பிற நாடுகளுக்குச் செல்லத் தேவையில்லாமல் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.