பயிற்சி நிறுவனத்தினர் கைது

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டதும் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறை மற்றும் நாசவேலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.முதல்கட்டமாக இதில் ஈடுபட்ட இளைஞர்கள், சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.மேலும், இந்த விவகாரத்தில் இளைஞர்களை வன்முறை செய்ய தூண்டிவிட்ட புகழ்பெற்ற யூடியூபர்கள், பயிற்சி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசமெங்கும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பீகாரின் பாட்னா மாவட்டத்தில் 7 பயிற்சி நிறுவனங்கள் விசாரனை வளையத்தில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் ஒன்பது பயிற்சி நிறுவன உரிமையாளர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பல மாநிலங்களில் இதுகுறித்ஹ்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.