தமிழகத்தில் தான் அதிக பயனாளிகள்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணயமைச்சர் டாக்டர் எல். முருகன், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை வழங்கி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில், திட்டப் பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2014க்கு முன்பு கழிப்பிட தேவை குறித்து பேசுவது தயக்கமாகவே இருந்தது. தற்போதைய மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பள்ளிகளுக்கும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு சாலைகளால் சிறிய ஊர்கள்கூட விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் அதிக பயனாளிகள் தமிழகத்தில் தான் உள்ளனர். பாரதத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 மீன்பிடி துறைமுகங்களில் சர்வதேச தரம் கொண்டதாக மாற்றுவதில் சென்னை காசிமேடு துறைமுகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.