கோயில் கும்பாபிஷேகம்

ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி. சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜ கோபுரத்துடன் புதியதாக ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலை கட்டியுள்ளார். இந்த கோவில் கும்பாபிஷேகம் விழா, ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீ பெரிய ஜீயர் சின்ன ஜீயர் சுவாமிகள் ஸ்ரீபெரும்புத்துர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ அப்பர் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. 3ம் கால யாகசாலை பூஜை செய்து கங்கை, யமுனா, கோதாவரி, காவிரி, கமண்டல நாகநதி உள்ளிட்ட புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு கோயில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தா.ம.க.தலைவர் ஜி.கே.வாசன், ஹிந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ரத்னகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலவை சச்சிதானந்தா சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.