யோகாவின் அழகே அதன் எளிமைதான்

யோகாவின் அழகே அதன் எளிமைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் இந்தக் கருத்தை தமிழில் பதிவு செய்துள்ள அவர், “யோகாவின் அழகே அதன் எளிமைதான். ஒரு யோகா விரிப்பும், வெற்றிடமுமே உங்களுக்கு போதுமானது. வீட்டிலோ, வேலை நேர இடைவேளையிலோ அல்லது குழுப் பயிற்சியாகவோ யோகாவை மேற்கொள்லலாம். நீங்கள் நாள் தவறாமல் பயிற்சி செய்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில், “ஆசனங்கள் மட்டுமன்றி, யோகா பல்வேறு ஆரோக்கிய நலன்களை அளிக்கக் கூடிய பல மூச்சு பயிற்சிகளையும் உள்ளடக்கியது. இந்த காணொலி இப்பயிற்சிகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டுள்ளது” என தெரிவித்து அதற்கான காணொலியை இணைத்துள்ளார்.