1.5 லட்சம் பேருக்கு வேலை

அடுத்த 18 மாதங்களில் பல்வேறு மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலையடுத்து, இந்திய இரயில்வே துறையில் சுமார் 1.5 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய ரயில்வேயில் 2014 முதல் 2022 வரை ஆண்டுக்கு சராசரியாக 43,000 ஆட்சேர்ப்புகள் மூலம் இதுவரை சுமார் 3.5 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஏறத்தாழ 1.5 லட்சம் கூடுதல் புதிய ஆட்சேர்ப்புகள் நிலையான வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று வைஷ்ணவ் ட்வீட் செய்துள்ளார்.