ஏ.பி.ஜி.பி அன்றே சொன்னது

நுகர்வோர் நலன் நாடும் அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) அமைப்பின் அகில பாரத பொதுச் சபை கூட்டம் ஏப்ரல் 22 மற்றும் 23, 2022 ஹரியானா ஃபரிதாபாத்தில் நடைபெற்றது. அதில் போடப்பட்ட தீர்மானங்களில் ஒன்று ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க வேண்டும் என்பது. அதற்காக மத்திய அரசு தற்போது ஆணை பிறப்பித்துள்ளது. மக்களின் பிரச்சனைகளாக ஏ.பி.ஜி.பி கண்டெடுக்கும் உண்மையான விஷயங்கள் குறித்து விளக்கி சொல்வதால், அரசாங்கமும் அதை கவனம் கொடுத்து பரிசீலிக்கிறது என்பது இதன் மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.