வீடுகளில் தேசியக் கொடி

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதனை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.11 முதல் 17ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை கல்லூரிகள் வழங்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்தும் விதமாக கதை, கட்டுரை, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக மேற்கொண்ட பணிகளை யுஜிசி தளத்தில் (www.ugc.ac.in) பதிவேற்ற வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.