10 லட்சம் பேருக்கு வேலை

மத்திய அரசின் அனைத்து  துறைகள்  மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து  பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேர் விரைவாக அரசால் பணியமர்த்தப்பட வேண்டும் என்று  அவர் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.