அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்

சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 22.06.2022 (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தினால் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள்  குறித்து மட்டும் ஆலோசனைகள் / குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். அதன் விவரங்களை சு.பாக்கியலெட்சுமி, முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600001 என்ற முகவரிக்கு 21.06.2022 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பிவைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.