அண்ணாமலை கேள்வி

தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் லாக்கப் மரணங்கள் குறித்து கருத்துப் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.