அல்கொய்தா மிரட்டல்

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் துணைஅமைப்பான அல்கொய்தா ஏ.கியு.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பாரதத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது. அதில், ‘காவி பயங்கரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உ.பி, குஜராத்தில் தங்கள் முடிவுக்கு காத்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய வீடுகளிலோ அல்லது தங்கள் ராணுவப் பகுதிகளிலோ அடைக்கலம் தேடமுடியாது. நம் அன்பான நபிக்காக நாம் பழிவாங்காவிட்டால், நம் தாய்மார்கள் நம்மைப் பிரிந்திருக்கட்டும். நம் நபியை அவமதிப்பவர்களைக் கொன்றுவிடுவோம். நம் நபியை அவமதிக்கத் துணிந்தவர்களின் எண்ணிக்கையை தகர்க்க எங்கள் உடலிலும், குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளைக் கட்டிவிடுவோம். நபியின் கண்ணியத்திற்காகப் போராடி இறக்கும்படி மற்றவர்களை வலியுறுத்துவோம். அமைதியோ அல்லது பாதுகாப்போ அவர்களை எதுவும் காப்பாற்ற முடியாது. எந்த கண்டனமோ, வருத்தமோ இதனை சமன் செய்யாது’ என கூறப்பட்டுள்ளது.