உலகமே பாராட்டும் பாரதம்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், மாநாட்டில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ” மத்திய அரசின் 8 ஆண்டுகளை நாம் சமீபத்தில் நிறைவு செய்துள்ளோம். கடந்து வந்த இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் முன்னேறி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் வணிகம் செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனை முதலீடு இங்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 21ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் வளர்ச்சிக்கு உத்தரப் பிரதேசம் தான் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் பாரதத்துக்கே ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கும். இன்று உலகம் பாரதத்தின் செயல்திறனைப் பார்த்து பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம். எங்கள் சீர்திருத்தங்கள் மூலம் பாரதத்தை வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம்’ என பேசினார்.