நிரூபிப்பாரா பெரியகருப்பன்?

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் இல்லையென்றால் ஜூன் 20ல் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உண்ணாவிரதம் இருப்போம். மே மாதம் வரையிலான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆனால் பிரதமர் பங்கேற்ற விழாவில் பேசிய முதல்வர், ஏற்கெனவே 14,000 கோடி பாக்கி உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் சரியான புள்ளி விவரத்தை தெரிந்துகொள்ளவில்லையா? அல்லது அவருக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு இதுகுறித்து தெரியவில்லையா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கி லும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று பிரதமர் சொன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். அதை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பெரிய கருப்பன் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரது வீட்டின் முன் நாங்கள் போராட வேண்டியிருக்கும்’ என்றார்.