ஜிசாட் 24 செயற்கைக்கோள்

பாரதத்தில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 24 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இஸ்ரோவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான இது 4,180 கிலோ எடை கொண்டது. இந்த ஜிசாட் 24ல் டி.டி.எச் டெலிவிஷன் மற்றும் செல்போன் சேவைக்குப் பயன்படும் க்யூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து கனரக ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஜூன் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மத்திய விண்வெளி ஆய்வுத் துறையின்கீழ் இயங்கும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் இந்த ராக்கெட் ஏவுதல் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஜிசாட் 24 செயற்கைக்கோள் பயன்பாட்டு சேவைகள் அனைத்தும் ‘டாடா பிளே’ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.