எவரெஸ்ட் சிகரத்தில் தேசிய கீதம்

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் விக்ராந்த் யுனியால், பாரத சுதந்திரத்தின் 75 வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியக் கொடியை ஏற்றி நமது தேசிய கீதத்தை பாடினார். சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த ஆனால் யாருக்கும் அதிகம் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் இயக்கங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் தனது சாதனையை அர்ப்பணித்துள்ளார். இதேபோல கேரள மாநிலம் பத்தனம்திட்டா பந்தளம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் ஹசன் கான். கேரள தலைமைச் செயலக ஊழியரான இவர், சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்து அங்கு பாரத தேசிய கொடியை பறக்க விட்டு சாதனை புரிந்தார்.