விவசாயிகளுக்கு நிதி உதவி

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசின் சார்பில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் என்பது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் என தவணையாக பிரித்து வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இன்று (மே 31) விவசாயிகளுக்கு 11வது தவணையாக ரூ. 2,000 நிதி வழங்கப்படும். அந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் பயனடையும் விவசாய பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.