பிரதமர் மோடி வரவேற்பு

கலால் வரி குறைப்பு உள்ளிட்ட முடிவுகள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ‘மக்கள்தான் எப்போதும் நமக்கு முதன்மை”. இந்த விலை குறைப்பு முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளுக்கு சாதகமாக அமையும். இது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையையும் எளிதாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ‘உஜ்வாலா யோஜனா திட்டம் கோடிக்கணக்கான பாரத நாட்டவருக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவியுள்ளது. உஜ்வாலா திட்ட மானியம் குறித்த அறிவிப்பு குடும்பங்களின் பட்ஜெட்டை மிகவும் எளிதாக்கும்’ என தெரிவித்துள்ளார்.