வாக்குறுதி நிறைவேற்றம்

பா.ஜ.க தலைமையின்அமைந்த அசாம் மாநில அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, நேற்று 23 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணியை வழங்கி பல்வேறு துறைகளில் பணியமர்த்தியுள்ளது. கௌஹாத்தியில் உள்ள கானாபரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா பணி நியமனக் கடிதங்களை வழங்கி பேசுகையில், “போலீஸ் கான்ஸ்டபிளாக உள்ள எனது ஓட்டுநரின் பணி நியமனக் கடிதம் பெற சில ஆண்டுகளுக்கு முன் 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இன்று 23 ஆயிரம் இளைஞர்கள் அரசு நியமனம் பெற ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. நாங்கள் நியமனத்தை முற்றிலும் வெளிப்படையாக செய்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் சுத்தமான மற்றும் வெளிப்படையான செயல்முறை மூலம் வேலை கிடைத்துள்ளது.  இப்போது நமது சமூகத்தையும் அமைப்பையும் ஊழலற்றதாக மாற்றுவதற்கான உங்கள் பொறுப்பு பெரியது. அரசு ஊழியரான பிறகு உங்கள் பெற்றோரை மறக்காதீர்கள்” என கூறினார்.