ஆம் ஆத்மி எல்.எல்.ஏ கைது

வடக்கு டெல்லியில் ரோகினி, கரோல் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபோல் தெற்கு டெல்லியில், அமர் காலனி காவல் நிலையம் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் துவங்கியது. அதன் ஒருபகுதியாக, மதன்பூர் காதர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானுல்லா கானும் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை அடக்கிய காவல்துறையினர், அமானுல்லா கான் உள்ளிட்ட போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதேபோல டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போதும் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அமானுல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.