‘போக்சோ’வில் பாதிரி கைது

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள சர்ச் பாதிரி ஜோசப் ராஜா, இந்த சர்சுக்கு வரும் ஒரு பெண்ணின் மன வளர்ச்சி குன்றிய, 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உடலில் காயங்களை கண்ட அவரது தாய் அதுகுறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் மகேஸ்வரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாதிரி ஜோசப் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.