தலைமை பொறுப்பேற்ற பாரதம்

ஆசிய தேர்தல் அதிகாரிகளின் சங்கத்தின் 2022-2024ம் ஆண்டிற்கான புதிய தலைவராக பாரதம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் மணிலாவில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாக வாரியம் மற்றும் பொதுச் சபையின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 20 ஆசிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் இரண்டாவது முறையாக பாரதம் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. முன்னதாக, கடந்த 2011 முதல் 2013 வரை இந்த அமைப்பின் துணைத் தலைமை பொறுப்பையும் பாரதம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.