பி.எப்.ஐ ஆபத்தான இயக்கம்

சென்னையில் கல்லூரி ஒன்றில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுகிறவர்கள் பயங்கரவாதிகள். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) இயக்கம் மிகவும் ஆபத்தானது. மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து பாரதத்தில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம். மேலும் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் யுத்தம் நடத்தவும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடவும் ஆட்களை அனுப்புகிறது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இதனை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் தவறு; ஆபத்தானது. நாட்டுக்கு அச்சுறுத்தலானது’ என்று பேசினார். 1976ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.ஸ் அதிகாரியான ஆர்.என் ரவி, சி.பி.ஐ, ஐ.பி உள்ளிட்ட உளவுத் துறைகளில் பணியாற்றியவர் என்பதும் 2018ம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.