ஹெராயினுடன் பயங்கரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, ஒரு போதைப்பொருள் பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள ஹெராயின், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில், ரபிதார் கிராமத்தில் சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.