மோடியை சந்திக்கும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அடுத்த மாதம் மே 20 முதல் 24 வரை தென் கொரியா மற்றும் ஜப்பானுக்குச் செல்கிறார். டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும், அப்போது அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார். மேலும், ஆஸ்திரேலியா, ஜப்பான் தலைவர்கள் உள்ளிட்ட குவாட் குழுவின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுவார். பாதுகாப்பு உறவுகளை ஆழமாக்குவது, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, நெருக்கமான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.