முஸ்லிம் மதகுரு மிரட்டல்

முஸ்லிம்கள் சமீப காலமாக ஹிந்து விழாக்களில் தொடர்ச்சியாக வன்முறைகளை அறங்கேற்றி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டெல்லி மாநகராட்சி நிர்வாகம் உட்பட பல மாநில அரசுகள் புல்டோசர்களைக் கொண்டு சட்டவிரோத கட்டுமானங்களை இடித்துத்தள்ளின. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவும் இத்திஹாத் இ மில்லத் கவுன்சில் கட்சியின் தலைவருமான மௌலானா தௌகிர் ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிர்வரும் 10 நாட்களுக்குள் அரசுகள் தங்களது செயல்பாடுகளை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அல்லா நாடினால் டெல்லியில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும். நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் தொடங்குவோம். அது அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரியதாக மாறும். முஸ்லிம்கள் வீதிக்கு வரும் நாளில், அவர்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, அரசாங்கத்தை குறிப்பாக நரேந்திர மோடியை நான் எச்சரிக்கிறேன்’ என கூறியுள்ளார். மௌலானா தௌகிர் ராசா முஸ்லிம்களை தூண்டிவிட்டு மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல.