மாஸ்க் கட்டாயம்

தமிழகத்தில் கோவிட் பரவல் குறைந்து வரும் நிலையில், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் கோவிட் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்படும். தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்’ என கூறினார்.