ஆயுஷ்மான் பாரத் சுகாதார திருவிழா

ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் 4வது ஆண்டு விழாவை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் 2022 ஏப்ரல் 16 முதல் 22 வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொண்டாடுகிறது. நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இது மேற்கொள்ளப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சக அதிகாரிகள், சுகாதாரச் செயலாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள் என பலர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். குறைந்த செலவில் எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும். இதில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு வட்டத்திற்கு ஒன்று என்று நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் சுகாதார திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.