காந்தியின் கனவு நனவாகும்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை முன்னிட்டு கடந்த 2014ல் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்காக 2021 முதல் 2026ம் ஆண்டு வரையில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளன. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திடக்கழிவு, நீர் கழிவு மேலாண்மை திட்டங்களும் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் மோசமாக விமர்சனம் செய்தன. ஆனால் இது இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. நாட்டின் வரலாற்றில் தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட வரலாறாக தூய்மை இந்தியா திட்டம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. மோடியின் அதிதீவிர நடவடிக்கைகளால் மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவு நனவாகும் என பா.ஜ.க மூத்த தலைவர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.