பள்ளியில் மதமாற்றம்

திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நெற்றியில் திருநீறு பூசியும், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்தும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதற்கு பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் திருநீறு பூசுவதை பற்றியும், ருத்திராட்சம் அணிவது பற்றியும் விமர்சித்ததுடன், ஏசுவை வழிபட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். மாணவியை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியைகளிடம் கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவுக்கு பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.