சென்னையில் லவ் ஜிஹாத்

சென்னையில் வாழும் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெண்ணை, ஒரு முஸ்லிம் நபர் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு, அந்த பெண்ணை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார். பெண்ணின் தாய் தந்தையிடம் அந்த பெண்ணை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பேசவிடவில்லை. முகத்தையும் காட்ட விடவில்லை. இதற்கு காவல் துறையும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்து முன்னணி சார்பில், அந்தப் பெண் உடனடியாக நேரில் வரவேண்டும் என்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்தப் பெண் அழைத்து வரப்பட்டார். பின்னர் அந்தப் பெண்ணிடம் பெற்றோர் பேசவைக்கப்பட்டனர். தங்கள் பெண்ணை பார்த்து பேசவைத்த  இந்து முன்னணிக்கு அப்பெண்ணின் தாய் தந்தையர் நன்றி தெரிவித்தனர்.